எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம் - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் புகார்

மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது என்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பூளவாடி பிரிவு அரசமரம் டி எஸ் கார்னர் மற்றும் புது பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டது.

இதில் மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது. திமுக அரசு ஏற்றவுடன் மூன்று வருடங்களில் அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டது. ஆனால் தற்போது பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் மாணவர்களுக்கு தேவையான மிட்டாய்களில் போதை பொருள்களை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என கூறினார். இதை தொடர்ந்து திமுக நிர்வாகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.



மேலும் லாட்டரி சீட்டுகள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தடை விதித்தார். ஆனால் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 650 கோடியை லாட்டரி நிறுவன அதிபர் கட்சி நிதியாக வழங்கியுள்ளார். இந்த பணம் யாருடையது அனைத்துமே உங்களுடையது. நீங்கள் வாங்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லாட்டரி சீட்டுகள் அனைத்தும் லாட்டரி சீட்டு நிறுவனத்திற்கு சென்று சேர்கிறது. ஆனால் எதுவும் விழுகாது என்று பேசினார்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...