காற்றாலை மின்சாரத்தை அரசு உற்பத்தி செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பு - பொள்ளாச்சியில் சீமான் புகார்

தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் செயல்படுத்தலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர்கட்சியின் வேட்பாளர் சுரேஷ் குமாரை ஆதரித்து இன்று பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, 10 ஆண்டு பாஜக ஆட்சியில் நாட்டில் எதுவும் வளர்ந்து விடவில்லை. மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக சேர்ந்த 39 எம்பிக்கள் மக்களுக்காக எதுவும் பேசவில்லை. மீத்தேன் திட்டத்தை தமிழக விவசாயிகளை பாதிக்கும் காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.

காற்றாலை, சூரிய ஒளி மற்றும் கடல் அலை மின்சாரத்தை அரசை உற்பத்தி செய்யாமல், தனியாருக்கு தாரை வார்த்து இருப்பதாகவும், தேர்தல் பரப்புரையின் போது சீமான் குற்றம் சாட்டி பேசினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...