திமுக ஆட்சியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அமோகம் - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

தன்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன் என்று பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் ஏரிபாளையம், தலை கொண்ட அம்மன், கோவில் பகுதி, காந்தி சவுக் உட்பட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது பேசிய அவர்,தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் சிங்கள ராணுவ படைகளால் மீனவர்கள் அதிக அளவு சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் மற்றும் 2ஜி அலைக்கற்றையில் ஊழல் உட்பட பல்வேறு துறைகளில் ஊழல் நிறைந்து காணப்பட்டது.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவால் தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு உள்ளது என கனிமொழி அப்போது பரப்புரையில் பேசினார். ஆனால் திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது வீதி வீதியாக கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கின்றது. திமுக ஆட்சிக் காலத்தில் இலவசங்களை மகளிர்களுக்கு கொடுத்துவிட்டு ஏளனமாக பேசி வருகிறார்கள்.எனவே பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் உடுமலை ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவேன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க பாடுபடுவேன், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்வேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் சண்முகவேலு, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...