பொள்ளாச்சியில் அதிமுக பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம்

திமுக தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர், மேடை அமைக்கும் பணிகளை நிறுத்தி அனுமதி மறுப்பது அநாகரீகமான செயல். நாளை திட்டமிட்டபடி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து நாளை புதன் கிழமை மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக திருவள்ளுவர் திடலில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பள்ளிவாசல் அமைந்துள்ளதால் நாளை ரமலான் பண்டிகை நடைபெற உள்ள அந்த இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு இன்றைக்கே மேடை அமைக்கும் பணிகள் நடைபெற அனுமதி வழங்கிய காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேடை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதால் அங்கு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திரண்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இதே இடத்தில் இரண்டு முறை பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி உள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல் இங்கே பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் திமுகவினர் தூண்டுதல் பெயரில் காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் மேடை அமைக்கும் பணிகளை நிறுத்தி அனுமதி மறுப்பது அநாகரீகமான செயல். இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஜெயராமன் நாளை திட்டமிட்டபடி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...