வால்பாறையில் மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி..!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறையில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.



குறிப்பாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறை பகுதிக்கு வருவதால் அனைத்து கட்சியினர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தி நேற்று காலை வாட்டர்பால், கருமலை, வால்பாறை, வெள்ளமலை, முடீஸ், சோலையார், கன்னி மேடு சோலையார், சோலையாறு அணை, சேக்கள்முடி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு வால்பாறை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கும் அலுவலகம் கட்டி தருவதாக தெரிவித்தார்.



மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்தவும், வால்பாறை பகுதியில் மாற்று தொழில் கொண்டு வரவும், தொழில் பயிற்சி கல்லூரி கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கி மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...