உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை மருத்துவக்கல்லூரியில் மாரத்தான் போட்டி - 800 பேர் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஒரு மருத்துவ மாணவன் மற்றும் மாணவிக்கு தலா ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி ஒரு நோக்கத்தை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தனது 75 ஆவது ஆண்டு முடிவை கொண்டாடும் வேளையில், நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் "எனது ஆரோக்கியம், எனது உரிமை" என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சமூக நலன் மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், 2.5/5 கிமீ தூர மாரத்தான் நிகழ்வான Healcathon 2024 ஐ பெருமையுடன் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நல்வாழ்வை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இன்று அதிகாலை 5 மணி அளவில் தொடங்கிய Healcathon 2024 நிகழ்வில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் காவல் துறை ஓட்டப்பந்தய வீரர்கள் என சுமார் 800 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு, கோவை மருத்துவக் கல்லூரி, அவிநாசி ரோடு வளாகத்தில் தொடங்கியது.



கோவை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. நிர்மலா எம்.எஸ்., டி.ஜி.ஓ., இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, காலை 5.30 மணிக்கு கோவை மருத்துவக் கல்லூரி-கோடீசியா-தண்ணீர்பந்தல் சாலை-டைடல் பார்க் வரை 5 கிமீ தூரத்தை உள்ளடக்கிய மாரத்தான் போட்டியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.



வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சியின் முக்கிய பங்கையும் அவரது உத்வேகமூட்டும் வார்த்தைகள் வலியுறுத்தின. மேலும், சமூக நலனை மேம்படுத்துவதிலும், தனிநபர்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் Healcathon போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். சமூக மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் காளிதாஸ் P. தலைமையில் Healcathon 2024 நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அயராது உழைத்த அனைத்து பங்கேற்பாளர்கள், காவல் துறை ஆணையர், தன்னார்வலர்கள் மற்றும் நிதியுதவி வழங்கியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கல்லூரிக்குள் மட்டுமல்லாமல், சமூகத்திலும் ஆரோக்கியக் கல்வியையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதில் துறை உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



மாரத்தான் போட்டி முடிந்ததும், கலந்து கொண்டவர்களுக்கு பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஒரு மருத்துவ மாணவன் மற்றும் மாணவிக்கு தலா ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...