அதிமுக வேட்பாளரை போன்று அமெரிக்காவில் படிக்கவில்லை - தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மஸ்தான் நகர், காமராஜபுரம், பூளவாடி பிரிவு, மாரியம்மன் கோவில், ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் முன்னிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் பேசுகையில் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மொடக்குறிச்சி அரசு பள்ளியில் கல்வி கற்று இவ்வளவு தூரத்திற்கு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவில் வாழ்ந்தவர் கிடையாது என்றும் கூறினார்.

மேலும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...