கோவை மேட்டுப்பாளையத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ராமச்சந்திரன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மகன் ராமச்சந்திரன்(29). இவரை முன் விரோதம் காரணமாக கொல்ல செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகிய இரண்டு பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் திலீப், கௌரிசங்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...