கோவை சிறுவனின் ரூ.1 லட்சம் பரிசு தொகையை மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் வழங்கிய பெற்றோர்

குழந்தை சாய் சித்தார்த் தனது சாதனை மூலம் பெற்ற ஒரு லட்சம் ரூபாயை பாஜகவுக்காக காசோலையாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சிறுவனின் பெற்றோர் வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்துவருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு இரண்டு வயதில் சாய் சித்தார்த் என்ற குழந்தை உள்ளது. 9 வது மாதம் முதலே குழந்தை சாய் சித்தார்த் சுறுசுறுப்புடன் காணப்பட்டார்.

மணிகண்டன் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்ததால் அவர் அறையில் இருந்த மேப் மற்றும் புத்தகங்களுடனே குழந்தை சாய் சித்தார்த் விளையாடி வந்தார். 2 வயதிலேயே உலக நாடுகளின் தேசிய கொடிகளை வைத்து அதற்குரிய நாடுகளின் பெயரை சரியாக கூறிவருகிறார். இந்திய வரைபடத்தை வைத்து அனைத்து மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகின்றார்.

உலக வரைபடத்தில் கண்டங்கள் பெயரை சரியாக காண்பித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். 21.52 வினாடிகளில் 28 இந்திய மாநிலங்களையும், உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும் 11 வினாடிகளில் கண்டறிந்து, உலகின் ஏழு அதிசயங்களை 8.95 வினாடிகளில் கண்டறிந்து, 195 கொடிகளை மிகக் குறுகிய நொடிகளில் கூறி10 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் தனக்கு கிடைத்த விருதுகளுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முகாம் அலுவலகத்திற்கு தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியுடன் சாய் சித்தார்த் இன்று (ஏப்ரல்.4) வந்தார். அப்போது பூஜை முடித்து வெளியே வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு நெற்றியில் விபூதி இட்டு அவரிடம் ஆசி பெற்றார்.



குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சாய் சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர்கள் குழந்தை சாய் சித்தார்த் தனது சாதனை மூலம் பெற்ற ஒரு லட்சம் ரூபாயை தமிழ்நாடு பாஜகவுக்கு காசோலையாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் வழங்கினர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...