உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் – தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி

அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தால் ஆதரவு அளிப்பதாக வாக்கு கேட்க வந்த வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் உப்பாறு பாசன விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் குண்டடம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் வேனில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர் பாதை என்ற இடத்தில் ஆற்றல் அசோக்குமார் திறந்தவெனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார்.



அப்போது உப்பாறு பாசன விவசாயிகள் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் வேனில் ஏறி தங்கள் பகுதியில் உள்ள அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்து தந்தால் பாசன விவசாயிகள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.



இதனைக் கேட்ட வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சட்டப்படி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தின் போது மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன், பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், நகரச் செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக பன்னீர், வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...