உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

காந்தி சதுக்கம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய அணிவகுப்புக்கு உடுமலை டி.எஸ் பி.சுகுமாறன் தலைமை வகித்தார். அணிவகுப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், அச்சப்பட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் உடுமலையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. காந்தி சதுக்கம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய அணிவகுப்புக்கு உடுமலை டி.எஸ் பி.சுகுமாறன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் ஜீவானந்தம், பாலமுருகன்,கீதா, நிர்மலாதேவி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னசி மேரி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



காவல்துறையினர் அணிவகுப்பு பள்ளிவாசல் வீதி, சதாசிவம் வீதி வழியாக பொள்ளாச்சி- பழனி சாலையை அடைந்து, பின்னர் பழைய பஸ் நிலையம் வழியாக சென்று மத்திய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் எ.ஜே. வஷவா தலைமையில் வருகை தந்த துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுத படையினர் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் 160க்கும் மேற்பட்டோர் அணி வகுப்பில் ஈடுபட்டனர்.



ஊர்வலம் முன்பு உடுமலை காவல்துறையினர் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அச்சப்பட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...