கவுண்டம்பாளையத்தில் குடிநீர் கேட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகள் கூறுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் அரசு பணியாளர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தினால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இதையடுத்து நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு வாயிலில் அமர்ந்து திடீர் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் இந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செல்லும் நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டதன் காரணமாக வாகனங்கள் எதுவும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரச படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என கைகளை தட்டி பாட்டு பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் நீங்கள் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள். மேலும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதால் தங்களால் வெளியில் இருந்து தண்ணீர் கூட வாங்கி ஊத்த முடிவதில்லை என்று கூறினர்.

இதனையடுத்து ஹவுசிங் போர்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணி நேரத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் மக்கள் கலைந்துசென்றனர். பிரச்சனை தீர்க்கப்பட்டவிட்டால் போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...