திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் பகுதிகளான பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாகவே திராவிட கட்சிகள் அனைத்து திமுக அதிமுக பொதுமக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக, அதிமுகவினர் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாரத பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்.



மேலும் தற்போது உள்ள திட்டங்கள் தொடரவும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், சனுப்பெட்டி ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பாமக, பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...