வாராந்திர கூட்ட நெரிசல் காரணமாக கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாராந்திர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-சென்னை-கோவை இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமார்கத்தில் சென்னையில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி பகல் 10.20க்கு புறப்படும் வண்டி எண் 06049 கோயம்பத்தூர் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் இரவு 8.25க்கு கோவை வந்து சேரும். இந்த ரயிலில் 20 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...