கோவையில் உள்ள முன்னணி இன்குபேட்டர் ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸானது உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்பேட்டை முன்னேற்றக் கழகத்தின் கீழ் செயல்படுகின்ற டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இதன் வாயிலாக ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரி உயிரிசார் தொழில் நுட்பத்தை சார் தொழில் முனைவோர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வணிக வெற்றியை நோக்கி அவற்றைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐசி ரைஸின் சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் ஏஐசி ரைஸின் சார்பில் இன்குபேஷன் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரதீப் ராஜ் மற்றும் முதலீடுகள் மற்றும் வணிக மேலாண்மையின் துணைத் தலைவர் அருண்ராஜ் மாணிக்கராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும், டைசில் உயிரி பூங்கா சார்பில் மேலாண்மை இயக்குநர் பூங்குமரன், நிர்வாக செயலர் காயத்ரி மற்றும் தலைமை மின் பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...