வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் - கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக நாம் தமிழர் கட்சியினர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 



இந்நிலையில், நேற்று (மார்ச்.26) நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் இரண்டு பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

அப்போது, ஒரு வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உள்ள நிலையில், மூன்று பேர் மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்ததாகவும், வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் வருவதற்கு முன்னதாகவே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய ஆவணங்களுடன் வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக ஆவேசமடைந்தனர். 

எங்களை தடுத்ததை போல உங்களால் பாஜகவினரிடம் கூற முடியுமா..? என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...