திருப்பூரில் கராத்தே செய்து காண்பித்தபடியே மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்..!

பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.


திருப்பூர்: திருப்பூரில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கராத்தே மாஸ்டர் ஒருவர் கராத்தே சீருடை அணிந்து வந்து, கராத்தே செய்தவாறு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.



இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை திருப்பூர் தொட்டிபாளையம் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதேபோல நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் என 10 தேர்தல் சந்தித்த ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சென்னையே சேர்ந்த, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நாடார் சமுதாய மக்கள் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்த சென்னையில் இருந்து வந்து திருப்பூரில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.



இதேபோல, திருப்பூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து கராத்தே செய்து காண்பித்தபடியே மனு கொடுக்க வந்திருந்தார்.



மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.

திருப்பூரில் இன்று மட்டும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...