திருப்பூரில் கராத்தே செய்து காண்பித்தபடியே மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்..!

பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.


திருப்பூர்: திருப்பூரில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கராத்தே மாஸ்டர் ஒருவர் கராத்தே சீருடை அணிந்து வந்து, கராத்தே செய்தவாறு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.



இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை திருப்பூர் தொட்டிபாளையம் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதேபோல நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் என 10 தேர்தல் சந்தித்த ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சென்னையே சேர்ந்த, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நாடார் சமுதாய மக்கள் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்த சென்னையில் இருந்து வந்து திருப்பூரில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.



இதேபோல, திருப்பூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து கராத்தே செய்து காண்பித்தபடியே மனு கொடுக்க வந்திருந்தார்.



மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.

திருப்பூரில் இன்று மட்டும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...