உடுமலையில் பறக்கும் படைத்துறையினர் சோதனையில் ரூ.1.88 லட்சம் பறிமுதல்

முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கம்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் பொட்டிய நாயக்கனூர் பிரிவு அருகே, கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சரவணகுமார் தலைமையில் மகாவிஷ்ணு,கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த வழியாக உடுமலை ராமசாமி நகரை சேர்ந்த டாக்டர் பின்னி என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ 89 ஆயிரத்து 550 ஐ கொண்டு சென்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேபோல, கூடுதல் பறக்கும் படை பிரிவு 1ல் கார்த்திக் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி,போலீசார் ஹரிஹர மணிகண்டன், சந்தோஷ்வேல் உள்ளிட்டோர் பொள்ளாச்சி- உடுமலை சாலையில் கோமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(54) என்பவர் ஒட்டி வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர்.அவர் முறையான ஆவணம் இல்லாமல் ரூ 98 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.



அதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் பறிமுதல் செய்த பணம் ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்து 50 ஐ ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் உடுமலை தாசில்தாருமான ப.சுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் சையதுராபியம்மாள், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...