காங்கேயத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ – தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் காலியாக இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றப்பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காலி மனைகளாக உள்ளது.

இந்த நிலம் முழுவதும் காய்ந்த புற்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீ பரவி குடியிருப்புக்குள் வராமல் தடுக்க உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



இந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அந்த வறண்ட காய்ந்த நிலப்பரப்பில் காட்டுத்தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்‌.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...