மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசிய குஷ்புவை கண்டித்து உடுமலையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமை தொகை குறித்து பேசி பெண்களை நடிகை குஷ்பு அவமதித்துவிட்டதாக கூறி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மகளிர் உரிமை தொகை குறித்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி குஷ்புவை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதைத் தொடர்ந்து மகளிர் அணியினர் குஷ்புவை கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன், மத்திய அரசை கண்டித்தும் பேசினார்கள்.

இறுதியாக குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தீ வைத்தும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி, துணைச் செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உள்ளிட்ட ஒன்றிய, நகர, சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...