திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு எதிராக பாஜக மற்றும் அதிமுகவினர் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாசல் பகுதி இல்லாமல் போகும் என பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், ஆனால் வாசல் பகுதிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் புறம்போக்கு இடத்தில் ஆரம்ப மையம் கட்டுவதாகவும், அரசியல் சூழ்ச்சி காரணமாகவும் திமுக விற்கு பெயர் வந்துவிடும் என்பதால் பாஜக, அதிமுகவினர் திட்டமிட்டு பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டி இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப மையம் குறித்த வரைபடத்தை பதாகையாக வைத்து ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஈடுபட்டனர்.



இடுவம்பாளையம் பகுதியில் அவசர உதவிக்கு 5 கிலோமீட்டர் அப்பால் செல்ல வேண்டிய நிலையில் ஆரம்ப மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...