அகில இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவராக கோவையை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் தேர்வு

கோவையை சேர்ந்த தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ள இன்ஜினியர் ஆர்.சந்திரசேகர் அகில இந்திய துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். வெற்றி சான்றிதழை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமேஷ் சிங்கா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



கோவை: அகில இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் (Paralympic committee of India) துணை தலைவராக இன்ஜினியர் சந்திரசேகர் தேர்வு பெற்றார்.

புதுடில்லியில் பாரா ஒலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) தேர்தல் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த இந்த தேர்தலில் 2024 முதல் 2028ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

இதில் கோவையை சேர்ந்த தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ள இன்ஜினியர் ஆர்.சந்திரசேகர் அகில இந்திய துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமேஷ் சிங்கா வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் தலைவராக பாரா ஒலிம்பிக் பதக்க வீரர் தேவேந்திரா ஜகாரியா தேர்வு பெற்றார்.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஏற்கனவே பதவி வகித்து வரும் இன்ஜினியர் சந்திரசேகர் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி, போட்டிகளில் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

ஆசிய அளவிலான போட்டி, உலக அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்ஜினியர் சந்திரசேகர் மாற்றுத்திறன் வீரர்கள் அதிகளவில் பங்கேற்க, பதக்கங்கள் குவிக்க தேவையான ஊக்கம், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தகுதியுள்ள பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, ஊக்கத்தொகை பெற்று தந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் முதல் முறையாக பாரா ஒலிம்பிக் கமிட்டியில் அகில இந்திய துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார். இது தமிழக மாற்று திறன் விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தை அளித்துள்ளது.

தென் இந்தியாவை சேர்ந்தவர் முதல் முறையாக பாரா ஒலிம்பிக் கமிட்டியில் துணைத் தலைவர் பதவியை பெற்று பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துடில்லியில் பாரா ஒலிம்பிக் கமிட்டியில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் காண பாராட்டு விழா நடந்தது. இதில் துணைத் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பேசுகையில்," எப்போதும் வெற்றியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கக் கூடாது. விடாமுயற்சி, பயிற்சி, நம்மால் முடியாத அளவை தாண்டியும் திறமையை காட்டும் உத்வேகம் எப்போதும் இருக்க வேண்டும்.

Never ever give up என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த பாரா ஒலிம்பிக் கமிட்டி அடுத்த கட்டத்துக்கு செல்லும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது முழு திறமையும் காட்டி அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும். கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு இந்தியாவிற்கு அதிக பதக்கங்கள் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார்.

இது தொடர்பாக இன்ஜினியர் சந்திரசேகர் கூறுகையில், " மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தங்களது திறமைகளை காட்ட தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். பாரீசில் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் சர்வ தேச பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதில் திறன் மிக்க வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு தரப்படும். பாரா ஒலிம்பிக் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் குவிக்க தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். கடந்த காலங்களில் சர்வதேச போட்டியில் பெற்ற வெற்றிகளை காட்டிலும் இரு மடங்கு வெற்றிகளை எட்டும் வகையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் இருக்கிறார்கள் என்றார்.

இன்ஜினியர் சந்திரசேகர் கோவை நேரு ஸ்டேடியத்தில் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளை நடத்தியுள்ளார். தேசிய அளவிலான வீரர்களை குறிப்பாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட வீரர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டு வருகிறார்.

வெளிநாடுகளில் நடந்த போட்டியில் வீரர்களுடன் சென்று ஊக்கப்படுத்தி வந்துள்ளார். கோவையை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அகில இந்திய பதவியை பெற்றிருப்பதால் மேலும் பல பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...