கோவை வெள்ளியங்கிரி மலையில் 22 வயது இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

வீரபாண்டியைச் சேர்ந்த கிரண் (22) நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.


கோவை: கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை பாத யாத்திரை செல்ல பிரசித்த பெற்ற ஆன்மிக தளமாக உள்ளது. தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலையில், சிவன் சுயம்பு வடிவத்தில் காட்சியளிக்கிறார்.

7 மலைகளைத் தாண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டுதோறும் மஹாசிவராத்திரியின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றம் துவங்குவர்.

இதனிடையே இந்தாண்டு மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறினர். சிவராத்திரி முடிந்தும் பக்தர்கள் தொடர்ந்து யாத்திரை சென்று வரும் நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 22 வயது மகன் கிரண் நேற்று (மார்ச்.10) வெள்ளியங்கிரி மலை ஏறினார்.



அவருக்கு வெள்ளியங்கிரி ஒட்டன் சமாதி என்ற 5வது மலை ஏறும் போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி வேலூர் மாவட்டம் சோளிங்கரையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்ற இளைஞர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பலியான நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...