கோவை வெள்ளியங்கிரி மலையில் 22 வயது இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

வீரபாண்டியைச் சேர்ந்த கிரண் (22) நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.


கோவை: கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை பாத யாத்திரை செல்ல பிரசித்த பெற்ற ஆன்மிக தளமாக உள்ளது. தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலையில், சிவன் சுயம்பு வடிவத்தில் காட்சியளிக்கிறார்.

7 மலைகளைத் தாண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டுதோறும் மஹாசிவராத்திரியின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றம் துவங்குவர்.

இதனிடையே இந்தாண்டு மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறினர். சிவராத்திரி முடிந்தும் பக்தர்கள் தொடர்ந்து யாத்திரை சென்று வரும் நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 22 வயது மகன் கிரண் நேற்று (மார்ச்.10) வெள்ளியங்கிரி மலை ஏறினார்.



அவருக்கு வெள்ளியங்கிரி ஒட்டன் சமாதி என்ற 5வது மலை ஏறும் போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி வேலூர் மாவட்டம் சோளிங்கரையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்ற இளைஞர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பலியான நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...