பெரியநாயக்கன்பாளையத்தில் குரங்குகள் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்ககோரி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நடைபாதையில் விற்பனைக்காக வைத்திருந்த வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளது. இந்த குரங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனவிலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச்.4) கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தன.

அவை நடைபாதை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ள வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டது. இதனால் நடைபாதை வியாபாரிகளின் பொருட்கள் வீணாவுதுடன், வியாபாரமும் நஷ்டத்துக்கு உள்ளாகிறது.

எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...