பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக நூதன பிரச்சாரம்

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம்ரூபாய் போடுவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவேன் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிரதமர் மோடி பின்னர் எதையும் செயல்படுத்தாமல் வாயில் வெறும் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உளுந்து வடையை குவித்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பிரதமர் மோடி சொன்ன திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...