தாராபுரம் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழாவை நகர திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில் அண்ணா சிலை அருகே திமுக கட்சி சின்னம் பதிக்கப்பட்ட 71 கிலோ கேக் வெட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு கொடுத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.



இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை வழங்கி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



இதற்கு முன்னதாக அண்ணா சிலை முன்பு 70 அடி திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் அவைத்தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர் தவச்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன்,தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அபிராமி கார்த்தி, ஹைடெக் அன்பழகன், சாஜிதா பானு, ராஜேந்திரன், முத்துலட்சுமி, பிலோமினா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...