அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து

பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர் கற்பகம் உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம், 1-வது வட்டக் கழக திமுக சார்பாக அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் வட்ட கழக செயலாளர் ப.இராஜசேகரன் தலைமையில் கழக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.



தொடர்ந்து அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர் கற்பகம் உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் அங்கு பயின்று வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண தொகுப்புகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



முன்னதாக பள்ளிக் குழந்தைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினர். மேலும் இன்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர் கற்பகம் முதல் சேர்க்கையை தொடங்கி வைத்து மாணவருக்கு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், பகுதி கழக நிர்வாகிகள் இராக்கிமுத்து, சண்முகசுந்தரம், சன்சோமு, தன்ராஜ், வட்ட கழக நிர்வாகிகள் அன்பழகன், உதயகுமார், உதயகுமார் (LPF) , சின்னச்சாமி, வெங்கடேஷ், சேது, பெள்ளிராஜ், ஜெயக்குமார், லிங்கசாமி, சின்னு, பிரகாஷ், ராஜ்கண்ணன், சாம்ராஜ், கனகு, சுலோச்சனா இளைஞரணியை சார்ந்த இம்ரான், சுபாஷ்கண்ணன், யஷ்வந்த், மற்றும் பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியை பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...