சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் புகையிலை விற்பனை செய்த பெண் கைது

சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்துவந்த குழந்தைராஜூ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் 893 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: சரவணம்பட்டி-துடியலுார் ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு நேற்று (பிப்.29) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் புகையிலைப் பொருட்கள் விற்பனையில் பெண் ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் கோவை பீளமேட்டை சேர்ந்த மனோரஞ்சிதம், 38 என்பது தெரிந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சரவணம்பட்டி பகுதியில் மாருதி காரில் புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் காரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மறைத்து வைத்திருந்த குழந்தைராஜூ என்பவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் தப்பினார். பின் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார், 893 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...