பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம்

அதிமுக ஆட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் வாழவே போராட வேண்டியுள்ளது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 5 முக்கு மற்றும் டேங்க் ரோடு ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு அதிமுக நகர செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகர செயலாளர் குருந்தாசலம், வீரபாண்டி நகர செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை, அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.



தொடர்ந்து அவர் பேசும்போது, அதிமுக ஆட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் வாழவே போராட வேண்டியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வை வெற்றி பெற செய்து பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யாரை கை காட்டுகிறாரோ அவரை இந்தியாவின் பிரதமராக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், பேச்சாளர் அசோக், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், தீபிகா, ரங்கசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், குணசேகரன், முருகேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...