விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து ஏமாற்றியதாக 30க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்

கோவை வடவள்ளியில் விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்த நிறுவனத்திடம் வீடு வாங்கி ஏமாந்தத 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.


கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியில் ஸ்ரீ தக்‌ஷா என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3௦ க்கும் மேற்பட்டோர் வீடு வாங்கி குடியேறியுள்ளனர். இந்நிலையில் அந்த நிறுவனம் விதிகளை மீறி கட்டிடம் கட்டி விற்பனை செய்துள்ளதாகவும், நிறுவனம் செய்த தவறால் தங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதம் விதிப்பதாகவும் வீடுகளை வாங்கியவர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அடிக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொடுத்த தக்‌ஷா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி நிர்வாகம்  மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையிலும் தக்‌ஷா நிறுவன தரப்பின்னர் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த  குடியிருப்புவாசிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனவும், மின் கட்டணத்திற்கு கூடுதலாக வரி என்ற பெயரில் வசூல் செய்வதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்த மனுவினை ஆட்சியரிடம் அளித்த அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....