கோவை பூ மார்க்கெட் அருகே டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே தேவாங்க பேட்டை வீதியைச் சேர்ந்தவர் பியூஸ் ஆர். டாடேடு. இவர் அதே பகுதியில் உள்ள 3

மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று (29-02-2024) காலை 9 மணியளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையில் இருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தெற்கு உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ வராமல் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...