கோவை ரயில் நிலையம் லங்கா கார் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி

கழிவுநீர் வெளியேறி பிரச்சனை ஏற்படும்போதும் தூய்மை பணியாளர்களை வைத்து தற்கால தீர்வு காண்பதில் மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் சந்திப்பு லங்கா கார்னர் அருகில் சாலையில் கழிவுநீர் குழாய் அடைபட்டதால் சாலைகளில் பெருக்கெடுத்து கழிவுநீர் ஓடுகிறது. இதனால் ரயில் நிலையம் வரும் பயணிகளும், சாலையின் பயணிக்கும் வாகன ஓட்டுகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

குறிப்பாக இந்த சாலையில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் அரசின் வரிப்பணம் வீணாகி தொடர்ந்து இது போன்ற அவலம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போதும் தூய்மை பணியாளர்களை வைத்து தற்கால தீர்வு காண்பதில் மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் தற்போது தான் இந்த சாலையில் பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் தொடர்ந்து நடைபெறும் இது போன்ற அவலங்கள் நடப்பது கோவை மாநகராட்சியின் அலட்சியமும் கோவை மாநகராட்சியின் மெத்தனப் போக்குமே இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு காரணம் என்று அப்பகுதிமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் இந்த சாலையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதி என்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனால் அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தொற்று நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் கோவை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...