டாலர் சிட்டி என்ற திருப்பூர் தற்போது வெறும் சிட்டியாக மாறிவிட்டது – பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி பேட்டி

மத்திய அரசு இதுவரை பாரத் ஆயில் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என்றும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அவர், திருப்பூர் போன்ற நகரங்களில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாததன் காரணமாக தொழில் செய்பவர்கள் எல்லாம் இப்பகுதிகளை விட்டு வெளியேறிவிட்டதால் வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. டாலர் சிட்டி என்ற திருப்பூர் தற்போது வெறும் சிட்டியாக மாறிவிட்டது.

மேலும் தென்னை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொப்பரையை பாரத் ஆயிலாக மாற்றி சந்தை படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இதுவரை பாரத் ஆயில் திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...