ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்து பேனர் அகற்றம் - ஆனைமலை முக்கோணத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை. அதிமுகவினர் பேனர்களை மட்டும் அகற்றுவதின் உள்நோக்கம் என்ன என போலீசாரிடம் அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலையில் MLA தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் நேற்று வைக்கப்பட்டது.

இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் இரவோடு இரவாக அதிமுகவினர் வைத்திருந்த பேனரை அகற்றினர். இன்று காலை பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அதிமுகவினர் பேனர்கள் அகற்றப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த போது அனுமதி இன்றி பேனர் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

அதே நேரம் ஆனைமலை முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை. அதிமுகவினர் பேனர்களை மட்டும் அகற்றுவதின் உள்நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர்.

போலீசாரிடம் முறையான பதில் இல்லாததால், வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொள்ளாச்சி சேத்துமடை சாலையில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் அடைந்த நிலையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...