ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்து பேனர் அகற்றம் - ஆனைமலை முக்கோணத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை. அதிமுகவினர் பேனர்களை மட்டும் அகற்றுவதின் உள்நோக்கம் என்ன என போலீசாரிடம் அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலையில் MLA தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் நேற்று வைக்கப்பட்டது.

இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் இரவோடு இரவாக அதிமுகவினர் வைத்திருந்த பேனரை அகற்றினர். இன்று காலை பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அதிமுகவினர் பேனர்கள் அகற்றப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த போது அனுமதி இன்றி பேனர் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

அதே நேரம் ஆனைமலை முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை. அதிமுகவினர் பேனர்களை மட்டும் அகற்றுவதின் உள்நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர்.

போலீசாரிடம் முறையான பதில் இல்லாததால், வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொள்ளாச்சி சேத்துமடை சாலையில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் அடைந்த நிலையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...