வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் கீழ் செயல்படும் கல்லூரி டீன் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக ஆட்சியரிடம் புகார்


சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்லூரியில் டீன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட ஆட்சியரிம் மாணவ, மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில்  பயிலும் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதுடன் அதற்கு நிகரான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக வகுப்புகள் சரியாக நடைபெருவதில்லை எனவும் அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அங்குள்ள காவலர்கள் மற்றும் டீன் மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்களூடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் அதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....