தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 4 கோடியே 70-லட்சம் ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் தொடக்கம்

திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் ஆகியவற்றை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டம் 2023-24 இன் கீழ் புதிய மழைநீர் வடிகால், சிமெண்ட் கான்கிரீட் தளம் மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் சின்னக் கடைவீதி டி எஸ் கார்னர் பகுதியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் வார்டு பகுதியில் உள்ள பழைய திருப்பூர் சாலை குடிசை பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கட்டுதல் மாநில நிதி குழு திட்டம் - பள்ளி மேம்பாட்டு நிதி - உட்கட்டமைப்பு பணிகள், வார்டு.17 வளையற்காரதெரு நகராட்சி நடுநிலை பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, தூய்மை பாரத இயக்கம் நமக்கு நாமே 2.0 திட்டத்தில் 2023-2024இன் கீழ் வார்டு.9 சூளைமேடு பகுதியில் புதிய பொது கழிப்பிடம் கட்டும் பணி 15.வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் 14,தார் சாலைகள் மேம்படுத்தும் பணி, திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி,நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் நகராட்சி நிதி - குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதியின் கீழ் 1 முதல் 30 வார்டுகளில் தண்ணீர் வசதிகள் செய்தல் என 4, கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 56-பணிகளை தொடங்கி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...