கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்த ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம்

நடப்பு 2023-24ம் நிதியாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி வார்டு பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாமுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 24.02.2024 மற்றும் 25.02.2024-ம் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2023-24ம் நிதியாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் கீழே குறிப்பிட்டுள்ள வார்டு பகுதிகளில் 24.02.2024 மற்றும் 25.02.2024 ஆகிய தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேற்கு மண்டலப்பகுதியில் 24.02.2024 மற்றும் 25.02.2024 தேதிகளில் வார்டு எண்.35-ல் அன் நகர் 3வது வீதி, நாகராஜன் நாகம்மாள் திருக்கோயில் வளாகத்திலும், 25.02.2024 அன்று மட்டும் வார்டு எண்.33-ல் முசு நகர் சமுதாய கூடத்திலும், வார்டு எண்.75-ல் சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.7 மற்றும் 8-ல் நேரு நகர் கிழக்கு பகுதியிலும், வார்டு எண்.24-ல் குருசாமி நகர் பகுதியிலும், வார்டு எண்.56 ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் வார்டு எண்.57-ல் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியிலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.85-ல் கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வார்டு எண்.93-ல் இடையர்பாளையம் சர்ச் வீதி- மாநகராட்சி சமுதாயக்கூடத்திலும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.15 அங்கன்வாடி மையம், சுப்ரமணியம்பாளையம், வார்டு எண்.19-ல் மணியகாரம்பாளையம், அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25-ல் காந்தி மாநகர் அரசு ஆரம்பப்பள்ளியிலும், வார்டு எண்.28-ல் காமதேனு நகர் மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா நாராயணசாமி வீதியிலும், வார்டு எண்.62 பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80-ல் கெம்பட்டி காலனி – மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.84ல் ஜி.எம்.நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் 24.02.2024 மற்றும் 25.02.2024 ஆகிய தினங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது. தவிர, 31.03.2024 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...