உடுமலை பிரதான பைபாஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல், விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள உடுமலை-சின்னார் சாலையில் ஆரியபவன் சிக்னல் முதல் போடிபட்டி அண்ணாநகர் லூர்து மாதா பள்ளி வரை, அதே போன்று ராஜேந்திரா சாலையில் தினசரி மார்க்கெட் முதல் தளிரோடு மேம்பால இணைப்பு வரை,மேலும் தாராபுரம் சாலையில் தாஜ் தியேட்டர் முதல் பஸ் நிலையம் ரவுண்டான வரை உள்ள பகுதிகளில் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடுமலை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் முடிவு செய்யப்பட்டு நேற்று (22-2-24) வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல்,விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதனால் உடுமலை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடுமலை பகுதியில் சாலைகளின் இரண்டு புறங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

மீண்டும் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடுமலைப்பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...