கோவை கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்ததை தீயணைப்புத்துறையினர் 45 நிமிடம் போராடி அணைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அன்னுார், கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர் தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், 45 நிமிடம் போராடி, நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அன்னுார் பகுதியில், 45 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...