ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளின் ஓட்டுநர்கள், உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்

கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணி செய்திட வேண்டும். அனைத்து தனியார் லாரி உரிமையாளர்கள் மாநகராட்சியின் உரிமம் பெற்று வாகனத்தினை இயக்கிட வேண்டும் என்று மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளின் ஓட்டுநர்கள், உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (22.02.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது,

கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணி செய்திட வேண்டும். அனைத்து தனியார் லாரி உரிமையாளர்கள் மாநகராட்சியின் உரிமம் பெற்று வாகனத்தினை இயக்கிட வேண்டும். உரிமம் (License) இல்லாமல் வாகனங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தொழிற்சாலை கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து வாகனங்களுக்கும் GPS கருவி பொருத்தப்பட வேண்டும்.



GPS கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) கண்காணிக்கப்படும். ஒருமுறை கழிவு நீர் வெளியேற்றிட கட்டணமாக 6000 லிட்டர் வரை ரூ.200%-ம் மற்றும் 6000 லிட்டருக்கு மேல் ரூ.300%ம் உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செலுத்தி கழிவுநீரை வெளியேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், கழிவு நீர் அகற்றிட மாநகராட்சியின் இலவச தொலைபேசி எண்.0422-14420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பணி செய்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நகர் நல அலுவலர் (பொ) மரு.வசந்த், திவாகர், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், பிரேம்ஆனந்த், சந்தியா, ஸ்ரீதேவி, கவிதா, சுகாதார ஆய்வாளர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...