கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: கிராமப்புறத்தில் நடக்கும் தீண்டாமைக்கு உரிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் கல்வி, அரசு வேலை வாய்ப்புகளை தங்கள் சமூகத்திற்கும் ஒதுக்க வேண்டும், முடி திருத்தம் நலவாரியத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க வேண்டும், மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சியில் இயங்கி வரும் சலூன் கடைகளில் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.



கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...