கார்பைட் கற்கள், எலீசியம் இராசயன பொடி மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஐந்தரை டன் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்கள் பறிமுதல்

கோவை உக்கடம் பகுதியில் கார்பைட் கற்கள் மற்றும் எலீசியம் என்னும் இராசயன பொடி மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஐந்தரை டன் எடையுள்ள மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கிருந்த கடைகளில் சப்போட்டா மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கற்கள் மற்றும் எலீசியம் என்ற இராசயன பவுடர் பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்று இடங்களில் சுமார் 5 டன் அளவிற்கு இருந்த மாம்பழங்கள், சப்போட்டா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு குப்பைகளில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய், தற்போது கோடைகாலம் என்பதால் மாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழ வியாபாரிகள் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்பைடு கற்களை பயன்படுத்துகின்றனர். 

இது போன்ற கற்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் கார்பைடு கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைப்பது தொடர்கிறது. தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தீலின் என்ற பொடியை புதிதாக பயன்படுத்தி வருவதும் சோதனையில் தெரியவந்துள்ளது. 

இந்த பழங்களை சாப்பிடுவதன் காரணமாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் உட்பட பலவித நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற சோதனைகள் மாவட்டம் முமுவதும் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....