வால்பாறையில் 1500 பேர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விண்ணப்பம் அளித்த மூன்றாயிரம் பேரில், சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 1500 பேருக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் முகாம் வால்பாறை பகுதியில் நடைபெற்றது. முகாமில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் வேண்டி விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்று சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

மேலும் இலவச தையல் எந்திரம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை, தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, பழங்குடியினர் சான்றிதழ், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, நத்தம் சிட்டா நகல்,பட்டா உறுதிச் சான்று, ஒருங்கிணைந்த சான்று, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்றிதழ் போன்றவை 1163 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

சுமார் 84 கோடியே 81 லட்சத்து 60,000 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம் பள்ளி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் வட்டாட்சியர் வாசுதேவன் வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...