பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக் கடையினை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை கணபதி பகுதி 45-வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யபட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் அமைவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



கடந்த 18 ஆண்டுகளாக கணபதி, 45-வது வார்டில் இயங்கி வந்த மதுபான கடை எண்: 1548 பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மதுபானக் கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இந்த மதுபானக் கடை அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் வழிபாடு தலங்கள் உள்ள பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என போராட்டஙகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கிருந்து மேற்குறிப்பிட்ட கடை அகற்றப்பட்டது. இக்கடையினால், இதுவரை வாகன விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழிந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு அங்கு மதுபான கடை அமைவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....