கோவை கவுண்டம்பாளையம் பகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கோவை வடக்கு மாவட்டத்திலேயே கவுண்டம்பாளையம் தொகுதியில் நமது பகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய இரவு பகல் அயராது பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது, இக்கூட்டம் பகுதி செயலாளர் சரத் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.



முன்னாள் பகுதி செயலாளர் சுந்தரம், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்துகொண்டு பேசினார்.



கூட்டத்தில் கோவை பாராளுமன்றத் தொகுதியை இந்தமுறை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய அயராது பாடுபடுவது, சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைக்கு எதிராக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவை கடுமையாக கண்டிப்பது, இ.வி.எம். வாக்குபதிவு முறையை மாற்றி வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும், கோவை வடக்கு மாவட்டத்திலேயே கவுண்டம்பாளையம் தொகுதியில் நமது பகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய இரவு பகல் அயராது பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும் கூட்டத்தில் மறைந்த முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் தகப்பனார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் நடராஜன் தாயார், 17வது வட்டக் கழக பிரதிநிதி சங்கரின் தாய், தந்தை ஆகியோர் மறைவிற்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டதில் மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், தமிழ் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் குட்டி வேலுசாமி, தன்ராஜ், ரமணன், குமரேசன், காளிதாஸ், நிர்வாகிகள் சங்கர், லோகநாதன், சனில், வசந்த், சண்முகம், ஈஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோஜ் உள்பட மகளிர் அணியினர், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...