உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மாவட்ட, மாநில, ஊரக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்திற்கு பயிற்சிக்கு வருகின்றனர்.



அவர்களுடன் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மைதானத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்பு மைதானத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால் பார்த்தீனியம் செடிகள் நீண்டு வளர்ந்து விதைகளை தூவி இனத்தை பல்கி பெருக்கி மைதானத்தை ஆக்கிரமித்து வருகிறது.



செடிகள் வெளியிடும் மகரந்தம் மற்றும் விதைகள் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை கொண்டதுடன், உடல் மீது படும் போது ஒருவிதமான அரிப்பு மற்றும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது. இது குறித்து பள்ளி நிர்வாகமும் கவனிப்பதில்லை. இதனால் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வருகின்ற பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் செடிகளை கடந்து செல்கையில் உடல் நலக்கோளாறால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

மைதான பராமரிப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட எதிர்கால விளையாட்டு வீரர்களை உருவாவதை சமுதாயம் இழக்க நேரிடும். எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...