உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மாவட்ட, மாநில, ஊரக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்திற்கு பயிற்சிக்கு வருகின்றனர்.



அவர்களுடன் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மைதானத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்பு மைதானத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால் பார்த்தீனியம் செடிகள் நீண்டு வளர்ந்து விதைகளை தூவி இனத்தை பல்கி பெருக்கி மைதானத்தை ஆக்கிரமித்து வருகிறது.



செடிகள் வெளியிடும் மகரந்தம் மற்றும் விதைகள் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை கொண்டதுடன், உடல் மீது படும் போது ஒருவிதமான அரிப்பு மற்றும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது. இது குறித்து பள்ளி நிர்வாகமும் கவனிப்பதில்லை. இதனால் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வருகின்ற பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் செடிகளை கடந்து செல்கையில் உடல் நலக்கோளாறால் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

மைதான பராமரிப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட எதிர்கால விளையாட்டு வீரர்களை உருவாவதை சமுதாயம் இழக்க நேரிடும். எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றி முறையான பராமரிப்பை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...