போதிய மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கிய வால்பாறை அணைகள்

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்ததால் வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அணைகள் வறண்ட மண்மேடுகளாக காட்சியளிக்கின்றது.

 

வால்பாறையில் ஆண்டுதோறும்  ஜுன் மாதம் மழை தொடங்கி 6 மாதங்களுக்கு விட்டுவிட்டு பெய்துவரும். இந்த ஆண்டு சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியில் 131 அடியைமட்டுமே எட்டியுள்ளது. இதனால் மாணாம்பள்ளி, சோலையார் அணையில் உள்ள 2 நீர் மின்நிலையங்களும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் கடைசியிலேயே சோலையார் ஆணை முழுகொள்ளளவை எட்டி 123 நாட்கள் முழுகொள்ளளவிலேயே இருந்த நிலையில் அணை மூன்று முறை திரந்து விடப்பட்டது.



2015-ம் ஆண்டும் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியதால் ஒரு முறை திறந்து  விடப்பட்ட நிலையில் மழை குறைவால் நீர்வரத்து குறையத் தொடங்கியது.



ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் ஆண்டு இறுதி வரையிலும் அதிகமழை பெய்யாதிருப்பதால் வால்பாறை சோலையார் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையின் நீர்மட்டம் 3.34 அடியில் உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....