ஆளுநருக்கு எதிராக மகாலிங்கபுரம் பகுதியில் திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்த ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலோடு சட்டமன்றம் தொடங்கும் என்பதால் மாநில அரசின் உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்தை ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை அவமதித்து வரும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும், தமிழ்நாடு அரசு பணத்தில் ஊதியம் பெரும் ஆளுநர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



திடீரென மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...