உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க உடன்படததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் உப்பாறு அணை பொறியாளர் அலுவலகம் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உப்பாறு அணையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் போது தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு தெரிவித்தனர்.

ஆனால் கூறியவாறு தண்ணீர் கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் பொறியாளர் அலுவலகம் முன்பு 19-வது நாளாக இன்று காத்திருப்பு . போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகிய 8-பேர் தற்போது தண்ணீர் வழங்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...